அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்றுவரும் முதலாவது டி-20 போட்டியில், இந்திய அணி ரன்கள் எடுக்க திணறி வருகிறது. 4 விக்கெட்டுகளை இழந்து 16 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவெடுத்தது.

தொடக்க வீரர்கள் மூன்று பேரும் மிக மோசமாக ஆடினர். ஷிகர் தவான் 12 பந்துகளில் 4 ரன்களையும், ராகுல் 4 பந்துகளில் 1 ரன்னையும், விராத்  கோலி 5 பந்துகள் ஆடி டக்அவுட்டும் ஆகினர்.

தற்போது ஷ்ரேயாஸ் மற்றும் பாண்ட்யா சுமாராக ஆடிவருகின்றனர். ஷ்ரேயாஸ் 36 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். பாண்ட்யா 17 பந்துகளில் 17 ரன்களையே அடித்துள்ளார்.