டெல்லி: நாடு முழுவதும்  24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 3 ஆயிரம் அதிகம்.  இதுவரை 3,04,10,577 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 1005 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக,  இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,99,459 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 61,588 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 5,23,257 பேர்  கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும்  இதுவரை 33,57,16,019 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.