டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக மேலும் 44,643 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 41,096 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 464 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் அதிகரிக்கப்பட்டு வந்தாலும், தொற்று பரவல் நாளுக்கு நாள் ஏறி இறங்கி வருகிறது. கடந்த வாரம் குறைந்த கொரோனா பாதிப்பு இந்த வாரம் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி,

கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 44,643 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,56,757 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில், மேலும் 464 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,26,754 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில்,  41,096 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,10,15,844 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 4,14,159 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 49,53,27,595 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.