டெல்லி: இந்தியாவில்  கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 30ஆயிரமாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக  உயர்ந்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் 41,649 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 41,649 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,16,13,993 ஆக உயர்நதுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், சிகிச்சை பலனின்றி 593 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா உயிரிழப்பு 4,23,810 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்றின் பிடியில் இருந்து 37,291  பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,07,81,263 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதையை நிலையில் நாடு முழுவதும்  4,08,920 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 46,15,18,479 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.