டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,342- பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், தொற்று காரணமாக 483 பேர் பலியாகி உள்ளனர். அதுபோல, தொற்று பாதிப்பில் இருந்து 38,470- பேர் குணம் அடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,342- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,12,93,062 ஆக உயர்ந்துள்ளது. . தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.12 சதவிகிதமாக உள்ளது. கடந்த 32-நாட்களாக தொற்று பாதிப்பு விகிதம்  3 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது.

நேற்று ஒரே நாளில் 38,740- பேர் தொற்று பாதிப்பில் இருந்து  குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,04,68,079 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 97.36-சதவிகிதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 483- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 19 ஆயிரத்து 470- ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,05,513- ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 42,34,17,030 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.