டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  282பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், 31,990 பேர் தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று ஒரே நாளில் புதிதாக 31,923 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,63,421 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும்  282பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,46,050 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக  உள்ளது

நேற்று மட்டும்,  தொற்றில் இருந்து 31,990 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.77% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  3,01,640 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.90% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 83,39,90,049 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 71,38,205 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.