டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254-பேருக்கு புதிதாககொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 219 பேர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளனர்.

,

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி (காலை 8 மணிவரையிலான 24மணி நேரம்) இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும்  27,254-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரத்து 175 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37,687- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 032 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 219- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 874- ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 269 ஆக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை  74,38,37,643 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,38,945 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

செப்டம்பர் 12ந்தேதி  வரை  54,30,14,076 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளன. நேற்று மட்டும்  12,08,247 மாதிரிகள்  பரிசோதிக்கப்பட்டன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து உள்ளது.