டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில்  புதிதாக 27,176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், 284 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே வேளையில், 38,012 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (காலை 8 மணி வரையிலான 24மணி நேர நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கொரோனாவால் மேலும் 27,176 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,16,755 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில், 284 கொரோனா நோயாளிகள்  இறந்துள்ளனர். இதன்மூலம்  மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,43,497 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  38,012 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,22,171 உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,51,087 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 75,89,12,277 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  61,15,690 பேருக்கு போடப்பட்டுஉள்ளது.