டெல்லி: கொரோனாவின் 2வது அலை சற்றே தணியத்தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், கடந்த 6 நாட்களாக சற்றே குறைந்து வருகிறது. அதே வேளையில் உயிரிழப்பு தொடர்ந்து 4 ஆயிரத்தை கடந்தே வருகிறது.

நாடு முழுவதுழம் கடந்த 24 மணி  நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,62,89,290 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில்   4,194 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,95,525 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 4,194 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மோத்த எண்ணிக்கை 2,30,70,365 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் 29,23,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 19,33,72,819 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும நேற்று ஒரே நாளில் 20,66,285 பேரின் மாதிரி சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை  32,64,84,155 பேரின் சாம்பிள்கள் சோதனை நடத்தப்பட்டு உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.