டெல்லி: இந்தியாவில் கொரோனா உயிர்பலிவ பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பாதிப்பு, 4,454 பலியாகி உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பலி எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வட மாநிலங்களில் சற்றே குறைந்து வரத் தொடங்கியிருந்தால், உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று  2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்தது.  2 லட்சத்து 22 ஆயிரத்து 315  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 447- ஆக உயர்ந்துள்ளது.

நேற்று  ஒரே நாளில்  தொற்று  பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 02 ஆயிரத்து 544- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 011- ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  4,454-பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவல் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 03 ஆயிரத்து 720- ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 20 ஆயிரத்து 716- ஆக குறைந்துள்ளது.

இதுவரை 19,60,51,962 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.