டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 20,799 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளனர், சிகிச்சை பலன்னிறி 180 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் 26,718  பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா 2வது அலை, நாடு முழுவதும்  குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதும் தொற்றுப் பாதிப்பு குறைவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது 3வது அலை வந்தால் அதனை எதிர்கொள் வதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று, பின்னர் சற்று ஏறியது.  தினசரி பாதிப்பு ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி (காலை 8மணி வரையிலான பதிவு)  நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பி நேற்று, 22, 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று சற்று குறைந்திருக்கிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 26,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். இதுவரை 3,31,21,247 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 180 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,48,997 ஆக அதி கரித்துள்ளது.

தற்போது 2,64,458 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 90,79,32,861பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.