டெல்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளனர்,  21,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில் சிகிச்சை பலனின்றி 193 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை (காலை 8மணி வரையிலான நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி,  கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 18,132 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,71,607 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மேலும் புதிதாக 193 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,50,782 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரே நாளில் 21,563 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,32,93,478 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,27,347 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று மட்டும் 46,57,679 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 95,19,84,373 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.