டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,623 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம்   13,596 பேர், நேற்று 13,058  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 14,623 பேருக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக மேலும் 14,623 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,41,08,996 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில்  197 பேர் பலியான நிலையில் கொரோனாவால் இந்தியாவில் இறந்தோர் எண்ணிக்கை 4,52,651 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 19,446  பேர் கொரோனாவால் குணமான நிலையில் இதுவரை 3,34,78,247 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது சிகிச்சையில் 1,78,098  உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 41,36,142 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 99,12,82,283 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.