டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,423 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன், 443 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 15,021  பேர் குணமடைந்துள்ளனர். அதே வேளையில் கொரோனா தடுப்பூசியும் 106 கோடி பேருக்கு போடப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 10,423 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,96,237ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும் 443 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,36,83,581ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  மேலும் 15,021 பேர் தொற்றில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,41,175 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 98.21% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,53,776  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,06,85,71,879 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.