டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளதுடன்,  125உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து 11,926 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் வெகுவாக குறைந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 10229 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,47,536 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும் 125 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,63,655 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்,  மேலும் 11,926  பேர் தொற்றில் இருந்து  குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,38,49,785 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,34,096  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 523 நாளில் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,12,34,30,478 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 9,15,198  சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதுவரை 62,46,66,542 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.