சென்ன‍ை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி, 20 ரன்கள் எடுத்திருந்தபோது, துவக்க வீரர் ரோகித் ஷர்மாவின் விக்கெட்டை இழந்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 578 என்ற பிரமாண்ட எண்ணிக்கையை எட்டியுள்ளது. எனவே, இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஆடவேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடரில் பெரிதாக சோபிக்காத ரோகித் ஷர்மா, இந்தப் போட்டியில் பொறுப்பை உணர்ந்து, பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.

வெறும் 6 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி, ரசிகர்களை ஏமாற்றினார்.