ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
ஜிம்பாப்வேவின் ஹாரரே மைதானத்தில் நடந்த போட்டியில், இந்திய அணி டாஸ் வென்றது. . ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய இந்திய அணி பணித்தது. ஜிம்பாவே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சிகும்புரா 54 ரன்கள் எடுத்தார்.

171 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. வெற்றிக்காக போராடிய மணிஷ் பாண்டே 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது.
Patrikai.com official YouTube Channel