மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவாபன், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்  சச்சின் டெண்டுல்கருக்கு கடந்தா மார்ச் மாதம் 27ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதை அவர் டிவிட் மூலம் தெரிவித்ததுடன், மருத்துவர்களின் அறிவுரைப்படி  வீட்டில் தனிமைப்படுதிக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக  தெரிவித்திருந்தார். மேலும்,  குடும்பத்தினர்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் வேறு யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை என தெரிவித்திருந்தார்.

அவருக்கு தொற்று பரவல் தொடங்கி ஒருவாரம்  ஆன நிலையில், இன்னும் குணமடையாததால்,. அவர் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.