டோக்கியோ

பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் அவனி லெஹரா துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றனர்.

 

 

அவனி

இந்திய வீராங்கனை பவினா பென் நேற்று வெள்ளிப்பதக்கம் பெற்று இந்த போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.  அவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.  தொடர்ந்து உயரம் தாண்டுதல் போட்டியிலும் இந்தியா  பதக்கம் வென்றது.

தற்போது இந்த போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை இந்திய வீராங்கனை அவனி லெஹரா வென்றுள்ளார்.  இவர் மகளிர் 10மீ துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.  அவருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.