சென்ன‍ை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சென்னை டெஸ்ட்டில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. தற்போதைய நிலையில் இந்திய அணி 60 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.

ரோகித் ஷர்மாவும் ஷப்மன் கில்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், கில் இந்தமுறை கெடுவாய்ப்பாக ஓலி ஸ்டோன் பந்துவீச்சில் டக்அவுட் ஆனார்.

ஆனால், கடந்த சில போட்டிகளில் சொதப்பிய ரோகித் ஷர்மா, தற்போதைய நிலையில் அரைசதம் அடித்துள்ளார். அவர் நிலைத்துநின்று சதம் அடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர், 49 பந்துகளில் 1 சிக்ஸர் & 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை அடித்துள்ளார்.

மற்றொரு பக்கம் இந்திய அணியின் சுவர் புஜாரா நிற்கிறார். அவர் 10 ரன்களை எடுத்துள்ளார். இந்த இணை நீடிக்கும்பட்சத்தில், இந்திய அணிக்கு நல்ல முன்னிலை கிடைக்கலாம்.