சென்னை: சென்னையில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்டில் 50% ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சேப்பாக்கம் ஸ்டேடியம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், விளையாட்டு மைதானங்கள்,  தியேட்டர்களில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் 50 சதவிகித ரசிகர்களுக்கு கொரோனா நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற உள்ள இந்தியா – இங்கிலாந்து இடையேயான போட்டிகளை காண 50 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள  இங்கிலாந்து கிரிகெட் அணியினர் இந்திய அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் ஆகியவற்றில் விளையாடுகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 5-ம் தேதியும் 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13 அன்றும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவுள்ளன.  இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளை காண  50% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை டெஸ்ட் போட்டிகளை காண  ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கனவே  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகஅரசு அறிவித்துள்ள அனுமதி காரணமாக,  .2-வது டெஸ்டில் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்  என  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்  அறிவித்துள்ளது.

முதல் முதல் டெஸ்டுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ரசிகர்களுக்கு  2-வது டெஸ்டை காண அனுமதி வழங்கப்படும் என்றும், அதற்கான  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.