டெல்லி: இந்திய எம்.பி.க்கள் குற்றவாளிகள் என  சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங்  அந்நாட்டு பாராளுமன்றத்தில்  பேசியதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள சீன தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தி தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தபோது பேசிய அந்நாட்டு பிரதமர் லீ சீன் லூங்,  இஸ்ரேலின் முன்னாள் பிரதமர்  டேவிட் பென் குரியன், ஜவஹர்லால் நேரு போன்றோர் தங்கள் தேசத்தின் விடுதலைக்காகப் போராடினார்கள், நம்நாட்டிலும் அதுபோன்ற தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அடுத்து வந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களிலிருந்து நழுவிவிட்டனர்.

நேருவின் இந்தியாவில் இன்றுள்ள எம்.பி.க்கள் பாதிப்பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதிலும் பலாத்காரம், கொலைக்குற்றச்சாட்டுகள் கூட இருக்கும் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக புனையப்பட்டவை என்றுகூட கூறப்படுகிறது. ஆனால், இதே பாதையில் சிங்கப்பூர் எம்.பி.க்கள் பயணித்துவிடக்கூடாது. அதைத் தடுக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.

சிங்கப்பூர் நாடாளுமனற்த்தில் இந்திய எம்.பி.க்கள் குறித்து அவர் பேச வேண்டிய காரணம் என்று விமர்சிக்கப்பட்டது. மேலும் அவர் கூறிய நேரு இந்தியா என்ற வார்த்தையும் பேசும்பொருளானது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, சிங்கப்பூர் பிரதமர் பேசியது தேவையற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து,  சிங்கப்பூர் தூதரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.