இந்தியா-சீனா-பூடான் நாட்டு எல்லையில் உள்ள சிக்கிம் டோக்லாம் பகுதியில், ராணுவ வாகனங்கள் மற்றும் தளவாடங்களை எடுத்துச்செல்லும் நோக்கில் சாலை பணிகளை சீனா செயல்படுத்தி வந்தது.

தனது ராணுவ முகாம் அமைந்துள்ள சொம்பல்ரி பகுதியை நோக்கி சீனா சாலை அமைப்பதாக குற்றம் சாட்டிய பூடான், இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய ராணுவம் சமீபத்தில் அந்த சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து சீனா சுமார் 3 ஆயிரம் வீரர்களை அங்கே குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை அனுப்பி வைத்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் மேற்கொண்ட கொடி கூட்டம் மற்றும் சில பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் மோதல் போக்கு தற்போது உருவாகி இருந்தது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய டோக்லாம் எல்லை பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றுள்ளன. மத்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் படைகள் திரும்ப பெறப்பட்ட தகவலை தெரிவித்துள்ளார். டோக்லாம் பகுதியில் அமைதியான சூழலை கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
[youtube-feed feed=1]