டில்லி

ர்வதேச அளவில் 117 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பசி மற்றும் ஊட்டச்சத்து இல்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா 102 ஆம் இடத்தில் உள்ளது.

சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து இல்லாத நாடுகள் குறித்த பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.  இந்த பட்டியலில் கடந்த 2014 ஆம் ஆண்டு 77 நாடுகளில் இந்தியா 55 ஆம் இடத்தில் இருந்துள்ளது.  இந்த வருடம் இதே பட்டியல் 117 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தெற்காசிய நாடுகளில் இந்தியா இப்போது 102 ஆம் இடத்தை பிடித்து பாகிஸ்தான் (94) வங்கதேசம்  (88), இலங்கை (66) ஆகியவற்றுக்கும்  கீழே உள்ளது.  அத்துடன் ஒவ்வொரு வருடமும் பசி பட்டியலில் இந்தியா பின்னோக்கியே செல்கிறது  என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆகவே இதை உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்திய நாட்டில், ஆறு முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட அனைத்து குழந்தைகளில் வெறும் 9.6 சதவீதம் பேருக்கு மட்டுமே குறைந்தபட்சம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு அளிக்கப்படுகிறது. அதே வேளையில் 2015-2016 நிலவரப்படி, 90 சதவீத இந்திய குடும்பங்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்தின.   இந்தியாவில் தற்போது 39 சதவீத வீடுகளில் சுகாதார வசதிகள் இல்லை  என அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மாதம் 2-ம் தேதி பிரதமர் மோடி இந்தியாவை ‘திறந்த மலம் கழித்தல் இல்லா நாடாக அறிவித்த அறிவிப்புக்கு முற்றிலும் மாறாக, “திறந்த வெளியில் மலம் கழித்தல் இன்னும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது” என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.  அத்துடன் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கிராமப்புறமா அல்லது நகர்ப்புறமா என அறிக்கையில் தெரிவிக்கவில்லை.