டெல்லி:
ந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி போன்றே இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். எஞ்சிய 3 டெஸ்டுகளில் குறைந்தது இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். அத்துடன் டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் எட்டிப்பிடிக்க முடியும். அதனால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி இந்தியாவுக்கு மிகவும் அவசியமாகும்.