பெங்களூரு:
ந்தியா- தென் ஆப்பிரிக்கா 5வது 20 ஓவர் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இரு அணிகள் இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி இந்திய அணி களம் இறங்கி பேட்டிங் செய்ய இருந்த நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் களம் இறங்கி விளையாடிய இந்திய அணி 3.3 ஒவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.