துபாய்:
சிய கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்த பாகிஸ்தான், இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவரிலே இலக்கை எட்டி, இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றது.

இந்திய அணி. இறுதிப்போட்டிக்கு முன்னேற இனி வரும் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோத உள்ளது.