புதுடெல்லி:
2021-22 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” எனக்கூறப்பட்டுள்ளது.