சனா:

ஏமன் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். சனா உள்பட பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஏமனின் வடமேற்கு சனா நகரில் ஹவுத்தி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் இன்று விமானத் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு பெண் உட்பட 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.

அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்தி வரும் மோதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.