துபாய்:

தெற்கு ஓமன் மற்றும் சோகத்ரா ஏமனி தீவில் மெகுனு புயல் தாக்கியதில் 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலியாயினர்.

ஓமனில் தோஃபார், அல் உஸ்தா மாகாணங்களை புயல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாக்கியது. இது 2 விதமாக தீவிரமடைந்து 170 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. ஸ்கோத்ராவில் புயல் கரையை கடந்தது.

புயலில் சிக்கி மாயமான 2 இந்தியர்களின் ஒருவரை ஓமன் போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள மது என்பவரை தேடும் பணி நடந்து வருகிறது என்று சலலாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. 145 இந்தியர்கள் மற்றும் 315 பங்களாதேஷ் நாட்டினருக்கு சலலாவில் இந்திய தூதரகம் உணவு வழங்கியுள்ளது.

மேலும், கப்பல் சிப்பந்திகள் 50 பேருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. சலலா துறைமுகமத்தில் 4 இந்திய பதிவு கொண்ட கப்பல்கள் மூழ்கியுள்ளது. அனைத்து இந்திய சிப்பந்திகளும் பத்திரமாக உள்ளனர் என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. புயலில் சிக்கி 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் இறந்துள்ளனர்.