லக்னோ:

உத்தரப்பிரதேசம் மதுரா போக்குவரத்து அலுவலகத்தில், இறந்தவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்சிங்புரா பகுயை சேர்ந்த சீட்ராம் ஜோடன் என்பவருக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது.

ஆனால் அவர் கடந்த ஆண்டு ஜூலை 9-ம் தேதி ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதேபோல் மொஹால்ல மசானியை சேர்ந்த விரேந்திராவுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுள்ளது. இவரும் கடந்த நவம்பரில் இறந்துவிட்டார். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.