டெல்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும், 83,883 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,043 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,53,406 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 83,883 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் 1,043 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 67,376 ஆக உயர்ந்துள்ளது.

இதவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 29.70 லட்சமாக அதிகரித்துள்ளனர்.

தற்போதைய நிலையில், 8.15 லட்சம் பேருக்கு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.76% ஆகவும் குணமடைந்தோர் விகிதம் 76.98% ஆகவும் உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.