பெங்களூரு

ன்னும் 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று அம்மாநில  முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

நேற்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ”தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்திருந்தனர். ஆனால் மந்திரிசபை கூட்டத்தில் இலவசத் திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டும் அளித்துவிட்டு, அமல்படுத்திவிட்டது போல் நாடகமாடுகிறார்கள்.

அத்துடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனடியாக பாஜக  தலைவர்கள், தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.  காங்கிரஸ் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறது. பாஜகவினர் காங்கிரஸ் கட்சியினருக்கு, தலை வணங்கிச் செல்ல வேண்டும் என்ற பிரச்சினையே இல்லை.

பாஜல ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளை நிறுத்துவதாகக் காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அதே வேளையில் பல்வேறு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் பா.ஜனதா தோல்வி அடைந்திருக்கிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்றும் மோடி மீண்டும் 3-வது முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. கர்நாடக அரசியலில் இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி.” எனக் கூறி உள்ளார்.