ஸ்லாமாபாத்

மது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த வேண்டும் எனப் பாகிஸ்தான் முன்னாள்  பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் இம்ரான்கான் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த ஊழல் தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் இம்ரான்கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. காவல்துறையினர் இம்ரான்கானை வீடுபுகுந்து கைது செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

இம்ரான்கான் கைதுக்கு முன் பேசி வெளியிட்ட வீடியோவில்,

”என் பாகிஸ்தானியர்களே இந்த தகவல் உங்களை அடையும்போது நான் சிறை சென்றிருப்பேன். நீங்கள் வீட்டில் அமைதியாக இருக்கவேண்டாம் என்பதே என் ஒரே வேண்டுகோள். நான் கடினமான சூழ்நிலையைச் சந்திப்பது எனக்காக அல்ல, உங்களுக்காகத்தான், உங்கள் தலைமுறைக்காகத்தான். உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடாமல் அடிமை வாழ்க்கை வாழ்ந்தால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

அடிமைகளுக்கு என்று சொந்த வாழ்க்கை இல்லை. அடிமைகள் நிலத்தில் உள்ள எறும்பு போன்றது. அவைகள் அதிக உயரத்தை எட்டாது. இது நீதிக்கான, உங்கள் உரிமைக்கான, சுதந்திரத்திற்கான போராட்டம். சுதந்திரத்தை யாரும் உங்கள் தட்டில் வைக்கமாட்டார்கள். உங்கள் உரிமையைப் பெறும்வரை நீங்கள் தொடர்ந்து போராடுங்கள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு உங்களின் மிகப்பெரிய அடிப்படை உரிமையாகும்’ .

என்று கூறி உள்ளார்.