ஸ்லாமாபாத்

மது கணவர் சிறையிலேயே கொல்லப்படலாம் என இம்ரான்கான் மனைவி கூறி உள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீபி, சிறையில் உள்ள தனது கணவரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அட்டாக் சிறையில் தனது கணவர் விஷம் வைத்து கொலை செய்யப்படலாம் எனக் கூறி உள்ளார்.

புஷ்ரா பீபி பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்,

”எனது கணவர் எந்தவித நியாயமும் இல்லாமல் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். என் கணவரை சட்டப்படி அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்.

அவர் ஆக்ஸ்போர்டில் படித்தவர், நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதால் அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு சிறையில் பி-கிளாஸ்  வசதிகளை வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் எனது கணவர் மீது கடந்த காலங்களில் இரண்டு படுகொலை முயற்சிகள் நடந்தன. இன்னும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இம்ரான் கான் உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளதால் அவர் அட்டாக் சிறையில் விஷம் வைத்து கொலை செய்யப்படுவார் என்ற அச்சம் உள்ளது. அவர் நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதால், எனது கணவர், வீட்டில் சமைத்த உணவைச் சிறையில் சாப்பிட அனுமதிக்க வேண்டும்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.