துபாய்:
ஐ.சி.சி. ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இலங்கை-வங்கதேச அணிகள் இடையே சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்திய அணி கேப்டன் வீராட் கோலி 857 புள்ளிகள் பெற்று தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா 825 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை தக்க வைத்து உள்ளார்.

மற்ற இந்திய வீரர்கள் யாரும் டாப் 10-ல் இடம் பெறவில்லை. ஷிகர் தவான் 18-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 865 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சு வரிசையில் இந்தியாவை சேர்ந்த ஜஸ்பிரீத் பும்ரா 690 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளார்.

வங்தேச தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை சேர்ந்த துஸ்மந்தா சமீரா மற்றும் இலங்கை கேப்டன் குஷால் பெரேராஆகியோர் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.