டில்லி,

மிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கான நேரில் வருவேன் என்றார் முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மார்கண்டேய கட்ஜூ.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து வரும் முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.

ட்விட்டர் மூலம் அவ்வபோது சட்ட ஆலோசனைகளும் குறிப்பிட்டு வந்தார். தமிழன் என்று சொல்டா தலை நிமிர்ந்து நில்லடா என தமிழில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்த்ர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாளில் வரும் என ட்விட்டரில் மார்கண்டேய கட்ஜு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜல்லிக் கட்டு போட்டியை காண நேரில் வருவேன் என்று கூறியுள்ளார்.