காபூல்: நான் பள்ளிக்கு செல்ல வேண்டும், நான் படித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்று தாலிபான்களுக்கு எதிராக, தாலிபான் சிறுமி ஆவேசமாக குரல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். பழமைவாதிகளான தாலிபான்கள்,  பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பெண்களுக்கெதிரான பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாட்டில் வழக்கம் போல் பெண்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், மதராசாக்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, படிக்க பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். இதனால், அந்நாட்டு பெண்கள் தாலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களை கல்வி நிலையங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி கல்லூரி மாணவிகளும், சிறுமிகளும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் சிறுமி ஒருவர் தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் அதற்கு அனுமதி கேட்டு போராடும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த  வீடியோடிவில் ஆங்கிலத்தில் ஆவேசமாக ஆவேசமாக தாலிபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுமி நான் பள்ளிக்கு செல்ல வேண்டும் 

இன்றைய சிறுமிகள் நாளைய அம்மாக்கள். அவர்களுக்கு கல்வி கிடைக்கவில்லை என்றால், தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை எப்படி அவர்களால் போதிக்க முடியும்?

நான்  புதிய தலைமுறையை சேர்ந்தவள். சாப்பிட்டு, தூங்கி வீட்டிலேயே முடங்கி கிடப்பதற்காக நான் பிறக்கவில்லை.

நான் பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும்

பெண்கள் படிக்காவிட்டால் நாட்டின் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்? 

கல்வி கற்பதின் மூலமே நாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் ஏதாவது செய்யக் கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

நமது எதிர்கால சந்ததி எப்படி நல்ல ஒழுக்கத்துடன் இருக்க முடியும்?

கல்வி இல்லை என்றால், இந்த உலகத்தில் நமக்கு எந்த மதிப்பும் இருக்காது.

கடவுள் எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்துள்ளார்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உள்ளது.

 இந்த வாய்ப்பையும், எங்களின் உரிமைகளையும் பறிக்க தலிபான்கள் யார்?

இவ்வாறு ஆவேசமாக பேசியுள்ளார்.