டெல்லி: கொரோனா வாரியர்சின் மனஉறுதிக்கான வீடியோவை உருவாக்கிய எஸ்பிபிஜி கொரோனாவில் இருந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார்.

பிரபல பின்னணி பபாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி.க்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவது  உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

எஸ்பிபி உயிர்பிழைத்து நலமுடன் திரும்ப வேண்டும் என திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும், பிரார்த்தனை செய்து  வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தனது டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், மக்களால் மிகவும் போற்றப்படும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்ஜி கொரோனாவில் இருந்து விரைவில்  குணமடைய பிராத்தனை செய்கிறேன். கொரோனா வால் சமூகத்தில் கடுமையான களங்கத்தை எதிர்கொண்ட  ஒரு நேரத்தில் நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கோரோனா வாரியர்ஸின்  மன உறுதியை உயர்த்துவதற்காக அவர் இதயத்தை உருக்கும் வகையிலான வீடியோ பாடலை உருவாக்கினார் என்று அவரை நினைவுகூர்ந்துள்ளார்.