விசாகப்பட்டினம்:

ந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணி வீரராக தமிழக வீரர்  சீனுரான் முத்துசாமி இடம்பெற்றுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நான் எனது தாய்வீட்டுக்கு வந்துள்ளேன் அது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால், தனது முதல் ஆட்டம் இந்தியாவுக்கு எதிரானது என்பதால், அது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட முத்துச்சாமியின் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிவிட்டனர். தற்போது அங்கு குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். இவர்களது உறவினர்கள்  பலர் இன்னமும் நாகப்பட்டினத்தில் வசித்து வருகின்றனர்.

தற்போது  இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் நாளில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் சேர்த்துள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்க அணியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்தியர் சீனுரான் முத்துசாமி என்ற வீரர் இடம் பெற்றுள்ளார்.

இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான முத்துசாமி தென் ஆப்பிரிக்க ஏ அணியில் இடம் பெற்று தற்போது தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளது குறித்து கூறிய முத்துச்சாமி, தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் எனும் என்னுடைய நீண்டநாள்  கனவு நிறைவேறி உள்ளது. இது மகிழ்ச்சிதான் என்றாலும், தனது பூர்வீக நாடான  இந்தியாவுக்கு எதிராக. முதன்முதலாக களமிறங்கியது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முத்துச்சாமி,  தென் ஆப்பிரிக்காவில் பிறந்தாலும், இன்னும் நான் தமிழரைப் போன்றுதான் இருக்கிறேன், பேசுகிறேன். இந்தியா வந்தவுடன் என் தாய் வீட்டுக்கு வந்த நினைவு வருகிறது. இன்னும் இந்தியக் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் ஆகியவை எங்களை விட்டு அகலவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக என்னுடைய பெற்றோர் எனக்குத் தீவிரமாகத் தயார் செய்தார்கள். என்னுடைய கனவும் நிறைவேறிவிட்டது. ஆனால், என்னுடைய பூர்வீக நாடான இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியாக இல்லை.

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஏராளமான இந்தியக் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு நான் யோகா செய்வேன், அங்குள்ள தமிழ்க் கோயில்களுக்குத் தொடர்ந்து சென்று வருகிறேன். இன்னும் எனது குடும்பத்திலும், உறவினர்கள் மத்தியிலும் தமிழ்தான் பேசுகிறோம். ஆனால், நான் தாமதமாகத்தான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல் தரக் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டரான முத்துசாமி 3,403 ரன்களும், 129 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

முத்துசாமி போன்று மற்றொரு இந்திய வீரரும் தென் ஆப்பிரி்க்க அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் கேசவ் மகராஜ். இவரும் சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.