அகமதாபாத்;

தான் கல்கி அவதாரம், அதனால் வேலைக்கு வர முடியாது என்ற குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவரை அலப்பறை செய்து வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்தார் சரோவர் அணையின் புனரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள  அமைப்பின் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரமேஷ்சந்திரா பெஃபர். கெசட்டடு ரேங்கில் உள்ள இவர் சில மாதங்களாக பணிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாநில அரசு சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டது.

அதற்கு பதில் அளித்துள்ள ரமேஷ்சந்திரா, ததான்  கடவுள் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகக் கருதப்படும் கல்கி அவதாரம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நான் வீட்டிருந்து  இருந்து தவம் செய்து வருகிறேன். என் தவத்தின் பயனாகவே  நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது என்று கூறி உள்ளார்.

மேலும், கடந்த 2010ம் ஆண்டுவாக்கில்தான் நான் கல்வி அவதாரம் என்பது தனக்கு தெரிய வந்ததாகவும், அதன் காரணமாக தனக்கு தெய்வ சக்திகள் உள்ளது. நான் கடவுளின் அவதாரம் என்பதால்,  வேலைக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் சமூக வளைதளங்களில் வைரலாகி விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.