சென்னை: தமிழகத்தின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்கள் உணவருந்த, ஒவ்வொரு மாடியிலும்  அறைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் 3400 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக ஒன்று முதல் 2பேர் வரை அவர்களுடன் தங்கியிருந்து உதவி செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் உணவு அருந்த போதுமான வசதிகள் மருத்துவமனையில் இல்லாத நிலை இருந்து வந்தது. தரைதளத்திற்கு வந்துதான் நோயாளிகளின் உதவியாளர்கள் உணவருந்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், பலர், நோயாளிகளுக்கே அருகே தரையில் அமர்ந்து உணவு அருந்தி வந்தனர். “பணியாளர்கள் தங்கள் உணவை சாப்பிடுவதற்காக தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் தரையில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு,  உணவு கழிவுகளை விட்டுச் செல்கின்றனர். இது சுத்தம் மற்றும் குப்பை சேகரிப்பை கடினமாக்குகிறது. இதனால், அந்த பகுதி சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, நோயாளிகளின் உதவியாளர்கள் உணவருந்தும் வகையில், ஒவ்வொரு தளத்திலும் அறை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதன்படி, தறபோது, ராஜீவ்காந்தி மருத்துவமனையின் இரண்டு உயரட்டு  கட்டிடத்தில் ஒவ்வொரு தளத்திலும் நோயாளிகளின் உதவியாளர்கள் உணவருந்தும் வகையில், சாப்பாட்டு இடங்களை உருவாக்கியுள்ளனர்,  மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்தை பராமரிக்கும் வகையிலும்இ ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறை விரைவில் மருத்துவமனையின் அனைத்து கட்டிடங்களும் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கூறிய மருத்துவமனை டீன் தெரநிராஜன், நோயாளிகளின்  உதவியாளர்கள் வழக்கமாக வார்டுகளுக்கு அருகில் தரையில் அமர்ந்து உணவருந்துவார்கள். இதை மாற்றுவதற்கான நடவடிக்கையாக, இரண்டு கோபுரத் தொகுதிகளின் ஒவ்வொரு தளத்திலும் உணவருந்தும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கோபுரம் 1 மற்றும் கோபுரம் ஆகிய 6 மாடிகளில் ஒவ்வொன்றிலும் சரக்கறை அமைத்துள்ளோம். இரண்டு தொகுதிகளின் காத்திருப்பு அரங்குகளிலும் நாங்கள் உணவருந்தும் அறைகள்  அமைத்துள்ளோம். .இந்த வசதி விரைவில் மற்ற கட்டிடங்களுக்கும் விரிவாக்கப்படும் என கூறினார்.

இந்த அறை காலை உணவுக்காக காலை 7.30 மணி முதல் 10 மணி வரை சரக்கறை திறந்திருக்கும். மதிய உணவுக்காக இரண்டு மணி நேரமும், இரவு உணவுக்கா மாலை 7 மணி முதல் திறந்திருக்கும். இந்த அறையில்  குடிநீர் மற்றும் கை கழுவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஈரமான கழிவுகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. “குறிப்பிட்ட நேரத்திற்குள் அறைகளை திறக்க மேற்பார்வையாளர்களையும், குடிநீரை நிரப்ப மற்றொரு பணியாளரையும் நியமித்துள்ளோம். மருத்துவமனையின் தூய்மையை பராமரிப்பது குறித்து நாங்கள் பணியாளர்களுக்கு கல்வி கற்பிக்க விரும்புகிறோம் என்று ன்று டாக்டர் தெரனிராஜன் கூறினார்.