ஐதராபாத்:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெலங்கானா மாநில கால்நடை மருத்துவர்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொள்ளப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இன்று அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்  கடந்த மாதம் 28-ம் தேதி பாலியல் பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை பெண் மருத்துவா் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் லாரி தொழிலாளா்கள் 4 பேரை அந்த மாநில காவல்துறையினர் கடந்த  29-ம் தேதி கைது செய்யப்பட்டனா்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த நிலையில், குற்றவாளிகளை குற்றம் நடந்த இடத்துக்கு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, குற்றவாளிகள் தப்பிச் செல்ல முயன்றதால், என்கவுண்டர் செய்யப் பட்டதாக  ஐதராபாத் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.