சென்னை: 150 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிவரும் ஐதராபாத் அணி, வெற்றியை நோக்கி நிதானமாக முன்னேறி வருகிறது.

துவக்க வீரர் விருதிமான் சாஹா 9 பந்துகளை சந்தித்து, வெறும் 1 ரன்னுக்கு அவுட்டாக, கேப்டன் டேவிட் வார்னரும், மணிஷ் பாண்டேவும் தற்போது ஆடிவருகின்றனர்.

இவர்களில், டேவிட் வார்னர் சற்று அதிரடியாக ஆடிவருகிறார். இதுவரை 28 பந்துகளை சந்தித்த அவர், 47 ரன்களை எடுத்துள்ளார். பாண்டே 28 பந்துகளில் 31 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

எளிய இலக்காய் இருந்தாலும், மும்பைக்கு எதிராக, கொல்கத்தா சொதப்பியதைப்போல் நேர்ந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் ஐதராபாத் அணி ஆடிவருவதாக தெரிகிறது.

தற்போது, 11 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், 1 விக்கெட் இழந்து 87 ரன்களை அடித்துள்ளது ஐதராபாத் அணி. வெற்றிக்கு, அந்த அணி 54 பந்துகளில் 63 ரன்களை அடிக்க வேண்டும்.