மதுவை ஊற்றி மனைவியை பலாத்காரம்…  நண்பர்களோடு சேர்ந்து கொடூரத்தை நடத்திய கணவன்..

கடற்கரையோரம் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துச் சென்றிருக்கிறார் கணவர்.

நண்பர் வீட்டுக்குப் போன பிறகுதான் பயங்கரங்கள் ஒவ்வொன்றாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. முதலில்  மனைவியை மது குடிக்கச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறான் கணவன். மனைவி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இருப்பினும் அந்தப் பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றப்படுகிறது.

மது போதையில் பெண் சுயநினைவை இழக்க நேரிட்ட நிலையில் கணவனும் அவரது நண்பர்களும் சேர்ந்து தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்..

இவ்வளவு பயங்கரத்தையும் தான் பெற்ற 5 வயது மகனின் கண்ணெதிரிலேயே நிகழ்த்தியிருக்கிறான் அந்த குடிகார சைக்கோ கணவன்.

இதற்குப் பிறகு அந்தப் பெண்ணை நடுரோட்டில் வீசிவிட்டு கணவன் நண்பர்களோடு சேர்ந்து வெளியே சென்றுவிட்டார்.. படுகாயங்களுடன் முனகிக் கொண்டிருந்த பெண்ணை அந்த வழியே சென்ற ஒரு இளைஞர் பார்த்து தனது காரில் அழைத்துச் சென்று    பெண்ணின் வீட்டில் விட்டு இருக்கிறார் அதன் பிறகு காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்.

போலீசார் வந்து விசாரித்த போது தான் தனக்கு நேர்ந்த பயங்கரத்தை ஒவ்வொன்றாக விவரித்திருக்கிறார் அந்தப்பெண்.

அத்துடன் பலாத்காரத்தின் போது கணவரும் நண்பர்களும் சேர்ந்து சிகரெட் சூடால் உடலில் பல இடங்களில்   பெண்ணை சித்திரவதை செய்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பெண்ணின் கணவரையும் அவரது நான்கு நண்பர்களையும் தேடிப்பிடித்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..

திருவனந்தபுரம் அருகே கடினம் குளம் என்ற காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த பலாத்கார சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..