நன்கு பழுத்த தக்காளி – 5

பெரிய வெங்காயம் – 1

பூண்டு – 6 பல்

சோள மாவு – 1 மேஜைக் கரண்டி

வெண்ணெய் – 2 தேக்கரண்டி

தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி

மிளகுத்தூள் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை;

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் வெண்ணெயை இரண்டு தேக்கரண்டி போட்டு,அதில் பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பூண்டு வதங்கியதும், அடுத்து வெங்காயம் அதையும் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். தக்காளியின் பச்சை வாசனை போகும்வரை  வதக்கவும். பிறகு  கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிட்டு பின் கொதித்ததும் மத்து அல்லது கரண்டியால் நன்றாக மசித்து வடிகட்டிக்  கொள்ள வேண்டும். வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் சேர்த்து, பின் அதில் தண்ணீரில் கரைத்த சோள மாவைக் கலக்கவும். பின்னர் ஐந்து  நிமிடம்  கொதித்த பின் இறக்கியதும் அதனுடன் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.