கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வியர்வை நாற்றத்தை எளிய இயற்கை முறைகளில் எப்படி தீர்வு காண்பது என்பதைப் பார்க்கலாம்.

 

மழைக்காலங்களில் விடவும் கோடை வெப்பத்தால் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். எனவே நாம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒன்றுக்கு இரண்டு முறையாவது குளிப்பது ஆரோக்கியம் தரும். இல்லாவிட்டால் வியர்வை துர்நாற்றத்தினால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படும்.

 

ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் குளித்துவர  துர்நாற்றம் போகும்.

 

ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் நனைத்து, அதை அக்குளில் தடவி 2 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்தால்  பலன் இருக்கும்.

தினமும் குளிக்கும் முன் ஒரு துண்டு எலுமிச்சயை அக்குளில் தேய்த்து அது காய்ந்த பிறகு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் குறையும்.

 

சந்தன பவுடரை எடுத்து அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரில் சுத்தப்படுத்தவும். இவ்வாறு அடிக்கடி செய்து  வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை முழுவதும் குணமாகும்.