சென்னை

தமிழக அரசு இமாசலப் பிரதேசத்துக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்கு அம்மாநில முதல்வர்  தமிழக முதல்வருக்கு நன்றிக் கடிதம் அனுப்பி உள்ளார்.

 தமிழக அர்சு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப்பிரதேசத்திற்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளித்ததற்காக, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்

இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தமது கடிதத்தில் ,

“தமிழக அரசு இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்குச் சவாலான நேரத்தில் வழங்கிய ரூ.10 கோடி நிதி பங்களிப்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசால் வழங்கப்படும் உதவிகள் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கப் பயன்படுத்தப்படும்.

இந்த உதவியால் பேரழிவிற்குப் பிறகு மீண்டும் கட்டியெழுப்பவும், மீளவும் உதவும், இந்த சவாலான நேரத்தில் தளராத ஆதரவிற்காக உங்களுக்கும், உங்கள் மாநில மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் தாராள மனப்பான்மையும், கருணையும் எங்களுக்கு இந்த கஷ்டத்தைச் சமாளிக்கும் நம்பிக்கையையும், வலிமையையும் அளித்துள்ளது.”

என்று குறிப்பிட்டுள்ளார்.