சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை அளிக்க வேண்டும், அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என்று மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில்கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழா தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்று வரும் தொழிற் கண்காட்சியையும் பார்வையிட்டடார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,  இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் எம்.ஐ.டி இடம் பெறுவது தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய பெருமை; இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ‘ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட வேறு பெருமை தேவையில்லை என்றார்.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டு பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் எம்.ஐ.டி. இடம்பெற்றுள்ளது. மாணவர்களின் வழிகாட்டியும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய அப்துல்கலாம் படித்த கல்லூரி எம்.ஐ.டி.. அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட எம்.ஐ.டி.க்கு வேறு பெருமை தேவையில்லை .

எம்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும். எம்.ஐ.டியில் அதிநவீன உள் விளையாட்டு அரங்கத்துடன் இணைந்த கலையரங்கம் கட்ட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கற்றல் வளாகம், பவள விழா பூங்கா அமைக்க ரூ.25 கோடி வழங்கப்படும் என்றவங்ர,  1975-ல் நடந்த வெள்ளி விழாவில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் என்பதையும் நினைவு கூர்ந்ததார்.

தொடர்ந்து பேசியவர், வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைகளுக்கு சேவையாற்ற முடியும். தமிழ்நாட்டு மாணவர்கள் அறிவாற்றலில் முதலிடத்துக்கு வர வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் எம்.ஐ.டி.யில் பல ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.ஐ.டி. நிறுவனமானது இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக பல ஆண்டு காலமாக செயல்பட்டு இன்று பவள விழாவை கண்டுள்ளது. எம்.ஐ.டி. வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கும், பல மையங்கள் உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்து வருகிறது. வான்வழி ஆராய்ச்சி மையத்தை எம்.ஐ.டி.யில் உருவாக்க அரசு உதவி செய்தது என்று முதலைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைவரும் உயர்கல்வி அளித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியவர்,  அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். தானியங்கி பொறியியல் என்ற சிறப்புறுமையத்தை அமைக்க ரூ.50 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. தானியங்கி பொறியியல் துறையில் 8 ஆய்வுக் கூடங்கள் அடங்கிய 2,700 சதுர அடியில் கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. மருத்துவம் முதல் ராணுவம் வரை தொழில்நுட்பம்தான் தற்போது வழிநடத்தி கொண்டிருக்கிறது .

இவ்வாறு கூறினார்.