சென்னை

ந்தந்த அரசுப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு இனி இலவச சீருடை நேரடியாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாகச் சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை அரசு வழங்க் வருகிறது.   இந்த பொருட்கள் மாணவர்களுக்கு வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக மாணவர்கள்  மற்றும் பெற்றோர்கள் தெரிவித்து வந்தனர்.  இந்நிலையில்  தமிழக பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

அதில்,

“தமிழக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த விநியோகப் பணிகள் ஆண்டுதோறும் கல்வி மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.  வரும் கல்வியாண்டு (2022-23) முதல் மாணவர்களுக்கான சீருடைகளை நேரடியாகப் பள்ளிகளிலேயே விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காகப் பள்ளியின் முகவரி, மாணவர்கள் எண்ணிக்கை விவரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய தேவைப்பட்டியலை மே 18-க்குள் மின்னஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும்.   மேலும் அதன் நகலைப் பிரதி எடுத்து உரிய ஆவணங்களுடன் சேர்த்துத் தொகுப்பு அறிக்கையை இயக்குநரகத்தில் மே 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.   இது மிக முக்கியமான பணி என்பதால் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும்.” 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.